ஸ்வாமி இராமானுசரின் மூன்று முக்கியமான திருமேனிகள்

ஸ்வாமி இராமானுசரின் மூன்று முக்கியமான திருமேனிகள் புகழ் பெற்றவை. அவை

1. தமருகந்த திருமேனி
2. தானுகந்த திருமேனி
3. தானான திருமேனி

தமருகந்த திருமேனி:

தமர் உகந்த திருமேனி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது. இவ்விடத்தில் சுமார் 12 ஆண்டுக் காலம் தங்கி இருந்து கைங்கர்யம் மேற்கொண்டார்.  திருவரங்கம் செல்வதற்காக இவ்வூர் சீடர்களிடம் விடைபெற்றபோது, இராமானுசரை பிரிந்து வாழ முடியாது என்று அவர்கள் கூற, அவர்கள் குறையைப்  போக்குவதற்காக, சிற்பியை வரவழைத்து, தன் உருவத்தை சிலையாக வடிக்கச்செய்து, தன் சக்திகளை பாய்ச்சினார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதனால் இச்சிலை தமருகந்த திருமேனி  என்று அழைக்கப்படுகிறது.

தானுகந்த திருமேனி:

தானுகந்த திருமேனி இராமனுசரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரில் உள்ளது. இராமனுசரின் சீடர்கள் அவர் உருவம் தாங்கிய சிலையைச்  செதுக்கினார்கள். இச்சிலையை இராமனுசர் அணைத்து தன் சக்திகளை செலுத்தினார். இராமனுசர் தான் விரும்பி இச்சிலையை அணைத்தால் தானுகந்த திருமேனி என்ற பெயர் ஏற்பட்டது.

தானான திருமேனி:

தானான திருமேனி திருவரங்கத்தில் உள்ளது. இராமனுசர் பரமபதம் அடைந்த பின்னர் அவர் பூத உடலை திருப்பள்ளி(புதைத்தல்) படுத்தினர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை  எரிப்பது கிடையாது.மாறாக திருபள்ளிப் படுத்துவார்கள். அவ்வாறு திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி இத்திருமேனியை தானான திருமேனி என்று பெயர்.

Comments